நாமகிரிப்பேட்டை, ஜன.8: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தனி தொகுதியில் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு கலாவதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பின்னர், 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்ததலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாச்சித் தேர்தலில் நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டவுடன், ஒன்றியக்குழு உறுப்பினராக போட்டியிட விருப்ப மனு செய்தார். ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக கலாவதி பதவி வகித்துள்ளதால், எந்தவித எதிர்ப்புமின்றி மிக எளிதாக நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 11வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எதிர்பார்த்தது போல், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர்களின் கை ஓங்கியது.