பள்ளிபாளையம், ஜன.8: தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு விரைவில் நடைபெறும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் பொங்கல் பரிசு வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பை மற்றும் இலவச வேட்டி-சேலைகளை வழங்கினர்.
அப்போது, அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.