நாமக்கல், ஜன.8: முத்துகாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக அருள்ராஜேஸ் மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அருள்ராஜேஸ்(38) வெற்றி பெற்றார். இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா முத்துகாப்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக அருள்ராஜேஸ் பதவியேற்றுக்கொண்டார். மேலும்,12 வார்டு உறுப்பினர்களான தமிழ்ச்செல்வி, செந்தில், முத்து, சுகுணா, பழனிச்சாமி, வரதராஜ், விமலா, மனோஜ், சுசீலா, ஜெயக்குமார், ராஜேஸ்வரி மற்றும் ராணி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.