கடலூர், ஜன. 8: கடந்த மாதம் 19ம் தேதி மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், கிராம உதவியாளர் தவமணி ஆகியோர் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு மேமாத்தூர் மணிமுக்தாறு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை தடுக்க முற்பட்டபோது லாரியை நிறுத்தாமல் கிராம நிர்வாக அலுவலரை அசிங்கமாக திட்டி, அவர் மீது லாரியை ஏற்ற முயன்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கச்சிபெருமாநத்தம் சிவக்குமார்(27) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.