குலசேகரம்: குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வரும் பொது விநியோக திட்டத்தை சீர்குலைக்காமல் பாதுகாத்தல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தங்களை மேற்கொள்வதையும், பெரும் சலுகைகளை வாரியிறைப்பதையும் கைவிட்டுவிட்டு பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்துதல், புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்தல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முறையான பென்ஷன் வழங்குதல், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு நிறுவனங்களை சீரழிப்பதை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடுதல், விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு நியாயமான சந்தை விலை கிடப்பதை உறுதி செய்தல், முறைசாரா தொழிலாளர்கள் அனைவரும் நலவாரியத்தில் இணைத்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு.