திருப்பூர், ஜன.7: திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளமுள்ள கரும்புடன் தலா 20 கிராம் திராட்சை, முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையும் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை வழங்கவும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.