குடிபோதையில் மினிலாரி ஓட்டிய டிரைவர் கைது

நாங்குநேரி,  ஜன. 3: நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் மற்றும் போலீசார்,  தட்டான்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்த மினிலாரியை நிறுத்த முயற்சித்தனர். போலீசாரை கண்டதும் சாலையில்  தறிகெட்டு ஓடத்துவங்கிய மினிலாரியை விரட்டிச் சென்று மடக்கினர். மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் பரப்பாடி அடுத்த ஆனிகுளத்தை சேர்ந்த சேர்மத்துரை(35)யிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: