தேர்தலில் முறைகேடு கோடங்கிபட்டியில் பொதுமக்கள் மறியல்

தேனி, ஜன. 3: தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறி கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர். தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருக்கண்ணன் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி 80க்கும் அதிகமான பொதுமக்கள் தேனி- போடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த மறியலில் போக்குவரத்து கடும் பாதிப்பிற்கு உள்ளானது. பழனிசெட்டிபட்டி போலீசார் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கை விட்டனர்.

Related Stories: