நீடாமங்கலம், ஜன.3: நீடாமங்கலம் பகுதிகளில் மார்கழி பட்ட வேர் கடலை விதைப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது.திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி, முன்னாவல்கோட்டை, அய்யம்பேட்டை, எடமேலையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேர்கடலை, கத்தரி, கீரைவகை, வெண்டை, உளுந்து, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கிகள், பருப்பு வகைகளை சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இங்கு விளையும் தானிய வகைகள் மற்றும் கீரை, காய்கள் தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கு எடுத்து வைத்து கொண்டு, மீதமுள்ளதை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மொத்தமாக விற்று காசாக்குகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி பகுதி வயல்களில் மாடுகட்டி உழவு செய்து விவசாய தொழிலாளர்கள் மூலம் மார்கழி பட்ட வேர்கடலை விதைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.