திருப்பத்தூரில் செல்போன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்பத்தூர், ஜன.3: திருப்பத்தூரில் செல்போன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரத்குமார்(35). செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் சம்பந்தமாக திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் ₹5 லட்சம் பெற்றுள்ளார். அந்தக் கடனுக்கு அசலும் வட்டியுமாக ₹9 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரமேஷ் மற்றும் அவரது மகன் கோபி(28) ஆகியோர் பாரத்குமாரிடம் மீண்டும்₹9 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, பாரத்குமார் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். மேலும், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்

Related Stories: