திருப்பத்தூர், ஜன.3: திருப்பத்தூரில் செல்போன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரத்குமார்(35). செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் சம்பந்தமாக திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் ₹5 லட்சம் பெற்றுள்ளார். அந்தக் கடனுக்கு அசலும் வட்டியுமாக ₹9 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.