சென்னை, ஜன. 3: சென்னைஐசிஎப், ரயில்வே காலனியில் வசிப்பவர் விஜி (48). ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கேரளா சென்றார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சென்னை திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.