திருத்துறைப்பூண்டி டிச.31: திருத்துறைப்பூண்டியில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தாலுகா மற்றும் நகர் எனஇரண்டு காவல் நிலையம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்த முடியும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகரபகுதிக்கும் ஒரு காவல் நிலையம் மட்டும் தான் உள்ளதால் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தான் தொடர்ந்து உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், மற்றும் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் ஆகிய 3 இடங்களில் புறக்காவல் நிலையம் உள்ளது. போலீஸ் பற்றாக்குறையால் 3 இடங்களிலும் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியேதான் கிடக்கிறது. எனவே பொதுமக்கள்நலன் கருதி புறகாவல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவாரூர் எஸ்.பி-க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.