ராஜபாளையம் மாயூரநாதர் கோயிலில் உழவாரப்பணி

ராஜபாளையம், டிச. 30:  ராஜபாளையம்  பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயிலில் உழவாரப்பணி நடந்தது. பன்னிரு திருமுறை மன்றம் அறப்பணி குழுவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இப்பணியை மேற்கொண்டனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜபாளையம்  பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் பிரகாரத்தை சுற்றி உள்ள புதர்களையும்,  சன்னதி தூண்கள், தரைத்தளம் மற்றும் கோயில் வழிபாட்டு பொருட்களையும் சுத்தப்படுத்தப்படுத்தினர். இந்த உழவாரப்பணியில் மன்ற உறுப்பினர்களுடன், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். பணி முடிவில் சுவாமிக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மன்றத்தை சேர்ந்த கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: