தேவாரம், டிச.30: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பதற்ற்ம நிறைந்த பூத்களாக கருதப்படும் 11 வாக்குசாவடிகளில் அதிகளவில் போலீசாரை பணியில் அமர்த்திட வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 92 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் மொத்தம் 49,141 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 24,310 பேரும், பெண்களில், 24,302 பேர் மற்றும் திருநங்கையர் 8 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.