வேதாரண்யம் அருகே தச்சு ஒப்பந்த தொழிலாளி திடீர் சாவு

வேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தச்சுவேலை செய்து வந்த கோவையை சேர்ந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் இறந்துபோனார். கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்தோட்டம் வடக்குவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் ஹரிதாஸ் (46). இவர் அங்கிருந்து ஒப்பந்த அடிப்படையில் வேதாரண்யம் தாலுகா தோப்புத்துறையில் தனியாரிடம் தச்சுவேலை செய்து வந்தார். நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர் கொள்ளிடத்தைச் சேர்ந்த ராஜகோபால் (38) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குபதிவுசெய்து இறந்த ஹரிதாஸின் உடலைகைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: