பெரம்பலூரில் மதுபானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது 368 பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர், டிச.30: பெரம்பலூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 368 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை யைத் தடுக்கும் வகையில் சிறப்பு மது விலக்கு ரோந் துபைணி மேற்கொள்ளப் பட்டது.இதில் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பஸ்டாண்டு திருந கர் சாலையில், சட்டவிரோ தமாக மது விற்பனை செய் வதாக கிடைத்த ரகசிய தக வலின் பேரில் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் நித்யா போலீசாருடன் செ ன்று விசாரணை செய்த தில் அங்கு மதுவிற்பனை செய்த பெரம்பலூர் மாவட் டம் அய்யலூரைச் சேர்ந்த பொன்னுசாமி, குரும்பாப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜே ந்திரன் ஆகிய மூவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 368 மது பாட்டில்களும், ரூ.57,600 பணமும் கைப் பற்றினர்.

Related Stories: