நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் தொடக்க விழா கொண்டாட்டம்

நாகர்கோவில், டிச.30: காங்கிரஸ் கட்சியின் தொடக்க விழாவையொட்டி நாகர்கோவிலில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கி 135 வருடம் ஆகிய நிலையில், இதன் ஆண்டு விழா கொண்டாட்டம் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது. இதில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மகேஷ் லாசர், நிர்வாகிகள் வடலி மகாலிங்கம், வட்டவிளை முருகேசன், ராஜபாண்டியன், டென்னிஸ், ஜெயந்தி முருகேசன், தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: