முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க கூட்டம்

தூத்துக்குடி,டிச.30: தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் முள்ளக்காடு கிளை சங்க கூட்டம் முத்தையாபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய தலைவராக வேல்ராஜ், செயலாளராக திருப்பதி, பொருளாளராக காசிலிங்கம், துணை தலைவராக திருமணி, துணை செயலாளராக பார்த்திபன் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மருத்துவர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: