நாகையில் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்

நாகை, டிச.29: நாகை லிபர்ட்டி கூடைபந்தாட்ட கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச கூடைபந்தாட்ட பயிற்சி முகாம் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். நாகை மாவட்டத்தில் உள்ள 5 பள்ளிகளில் இருந்து 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கூடைபந்து தொடர்பாக ஆரம்ப பயிற்சி முதல் அனைத்து வகையான பயிற்சிகளும் வரும் 31ம் தேதி வரை இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவசமாக உணவுகள் மற்றும் இருப்பிடங்களும் வழங்கப்பட்டது.

Related Stories: