திருக்காட்டுப்பள்ளி, டிச. 27: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு வெளியூரிலிருந்து வந்த 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஒதுக்காததால் நேற்று மாலை 6 மணி வரை காத்திருந்தனர். இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (27ம் தேதி) நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு திருச்சி, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பூதலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவு வழங்கப்பட்டது. இதையேற்று நாங்கள் நேற்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தோம். பூதலூர் ஒன்றியத்தில் 94 உள்ளாட்சி பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.