திருவாரூர், டிச.27: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதையொட்டி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வருவது சூரிய கிரகணம் ஆகும். அந்த வகையில் நேற்று காலை 8.06 மணி முதல் துவங்கிய இந்த சூரிய கிரகணமானது 11.20 வரையில் தொடர்ந்தது.இந்நிலையில் வழக்கமாக சூரியகிரகணம் என்றாலும் சந்திரகிரகணம் என்றாலும் இந்த கிரகணம் துவங்குவதற்கு முன்னாலும் முடிந்த பின்னரும் குளிப்பதும், வீட்டில்இருந்து வரும் பொருட்கள் மீது தர்ப்பை பில் போடுவதும் பொது மக்களிடம் வழக்கமான ஓன்றாக இருந்து வருகிறது.