புதுக்கோட்டை, டிச.27: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமவத்துவபுரம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சரி செய்து தர வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் வீடுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது அதன் தலைவர் கருணாநிதி முற்போக்கான சமத்துவபுர திட்டத்தை செயல்படுத்தி பணிகள் முடிக்கப்பட்டு வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு சாதி பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் இந்த சமத்துவபுரத்திற்கு பெரியார் சமத்துவபுரம் என்று பெயரிடப்பட்டது.