தரங்கம்பாடி, டிச.27: நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 15ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பல்லாயிரணக்கான உயிர்களை காவு வாங்கியது. சுனாமி 14ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து பேரணியாக புறப்பட்டு நினைவிடத்திற்கு வந்தனர். இதில் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து சுனாமியால் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும், மெழுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.