மணப்பாறை, டிச.25: மருங்காபுரி அருகேயுள்ள ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் வேளாண் பெருமக்களைச் சந்திக்க விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்றனர். விவசாயிகளிடம் இந்திய தேசிய விவசாயிகள் தினத்திற்குக் காரணமான முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பற்றி கூறியதோடு உலகத்திற்கே உணவை அளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி கூறினர்.