ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

மணப்பாறை, டிச.25: மருங்காபுரி அருகேயுள்ள ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் வேளாண் பெருமக்களைச் சந்திக்க விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்றனர். விவசாயிகளிடம் இந்திய தேசிய விவசாயிகள் தினத்திற்குக் காரணமான முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பற்றி கூறியதோடு உலகத்திற்கே உணவை அளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி கூறினர்.

அதோடு விவசாயிகள் மகிழும் வண்ணம் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நேரடியாக விவசாய நிலத்திற்கு வந்து விவசாயிகளைச் சந்தித்த பள்ளி மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும், விவசாய பெருமக்களும், ஊர் பெரியோர்களும் வெகுவாக பாராட்டினர். விவசாய நடவடிக்கைகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்நாளும் துணை நிற்போம் என்று விவசாயிகளுக்கு உறுதிஅளித்து பின்னர் அனைவரும் பள்ளிக்கு திரும்பினர்.

Related Stories: