மண்ணச்சநல்லூர் அருகே பரிதாபம் ஓடும் வேனில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு

மண்ணச்சநல்லூர், டிச.19: சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த வேனில் திடீரென்று டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வேனை மின் கம்பத்தில் மோதி நிறுத்தி ஐயப்ப பக்தர்களை பத்திரமாக காப்பாற்றிய டிரைவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுபாஷ்(30), டிரைவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி பகுதியைச் சேர்நத 20 ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்றனர். பரிமலையில் தரிசனம் முடிந்ததும் நேற்று சபரிமலையில் இருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த வேனை சுபாஷ் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் வேன் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவர் சுபாஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியில் துடித்த சுபாஷ் பயணிகளை காப்பாற்ற நினைத்து வேனை வேகம் குறைத்து லாவகமாக இடதுபுறமாக பாலத்தில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி நிறுத்தினார்.

Related Stories: