விருத்தாசலம், டிச. 19: பெண்ணாடம் அருகே உள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அரசமரம் மழையால் முறிந்து விழுந்தது. இதனை நெடுஞ்சாலை துறைக்கே தெரியாமல் சிலர் மரத்தை வெட்டி லாரியில் கொண்டு சென்றுவிட்டதாக திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை ஆய்வாளர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.