கொள்ளிடம், டிச.18: கொள்ளிடம் அருகே அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய அங்காடி கட்டிடத்தை உடனே திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடியில் உள்ள 1140 குடும்ப அட்டைகளை கொண்ட அங்கன்வாடி இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடியிலிருந்து வெள்ளைமணல், காடுவெட்டி, காவல்மானியம் மற்றும் தோணிதுறை ஆகிய பகுதிகளை பிரித்து, காவல்மானியம் கிராமத்தில் 287 குடும்ப அட்டைகளை பிரித்து கூட்டுறவு சங்கத்தின் ஒப்புதலின் பேரில் கிராம மக்கள் சார்பில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்காடி கட்டப்பட்டு முதலைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் பெயரில், கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு முதலைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்டைக்கப்பட்டுள்ளது.