ஊத்துக்கோட்டை, டிச. 17: பெரியபாளையம் அருகே குட்டையாக மாறிய தொளவேடு கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் செல்கின்றனர். அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள். இந்நிலையில், தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை நீர் பள்ளங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 5 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர்.