மூணாறு,டிச.16: மூணாறில் சுற்றுலா திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட முக்கிய அணைக்கட்டுகளில் பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிய துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் பகுதிகள் பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்து காணப்படுகிறது .எனவே, மாட்டுப்பட்டி குடிநீர்வாரிய அதிகாரிகள் கழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.உலக வரைபடத்தில் தனக்கென்று முத்திரை பதித்த மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட் பகுதிகள். எழில்மிகு அணைக்கட்டு, அப்பகுதியில் சிந்திக்கிடக்கும் இயற்கை அழகு போன்றவற்றை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினர் என தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.இப்படி இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் எக்கோபாயிண்ட் பகுதியில் குவியத் துவங்கியுள்ளது. பயணிகள் பயன்படுத்திய பிறகு விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் எக்கோ பாயிண்ட் பகுதியில் உள்ள பாலத்தில் விட்டுச் செல்வதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.குப்பைகள் கொட்டுவதற்காக குப்பைத் தொட்டிகள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தும் பயணிகள் குப்பைகளைக் கொட்டுவதால் அணைக்கட்டில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் குவியலாக காணப்படுகிறது.