தேனி, டிச. 16: வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்து வரும் நிலையில் நேற்று காலை வரை மாவட்டத்தில் மழை கொட்டித்தீர்த்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் மட்டும் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நீர் வளம் குறைவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சற்று குறைவாகவே பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை கடந்த 80 நாட்களுக்கும் மேலாக நல்ல முறையில் பெய்து வருகிறது. மாவட்டத்தின் சராசரி மழை அளவைக் கடந்து மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கிய மழை சனிக்கிழமை முழுவதும் பெய்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணி வரை பெய்தது.ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 11.6 மி.மீ., தேக்கடியில் 11.4 மி.மீ, கூடலூரில் 5.4 மி.மீ, உத்தமபாளையத்தில் 7 மி.மீ, வீரபாண்டியில் 9 மி.மீ, பெரியகுளத்தில் 20 மி.மீ, போடியில் 7.2 மி.மீ, ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூரில் தலா 6.2 மி.மீ மழை பதிவானது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் செழிப்புடன் காணப்படுகிறது.