கும்மிடிப்பூண்டி, டிச. 13: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத் (35). கும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டியுள்ள காட்டுக்கொள்ளை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே ஜெகன்நாத் நின்றிருந்தபோது 10 பேர் கொண்ட வடமாநில இளைஞர்கள் திடீரென அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.