ஈரோடு, டிச.13:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ஈரோடு வழியாக இயக்கி வந்த நாகர்கோவில்-மும்பை, மும்பை-நாகர்கோவில் ரயில்கள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது. இதேபோல், திருநெல்வேலி-தாதர் மற்றும் தாதர்-நாகர்கோவில் ரயில்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்தது.இந்த 4 ரயில்களும் ஈரோடு வழியாக பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன்மூலம், தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் ரயில்நிலையமாக ஈரோடு ரயில்நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த 4 ரயில்களையும் ஈரோடு வழியாக இயக்காமல் நாமக்கல் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.