கலசபாக்கம், டிச.13: தினகரன் செய்தி எதிரொலியால் கலசபாக்கம் அருகே வெங்காயத்தில் வேர்ப்புழு நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கலசபாக்கம் அடுத்த கடலாடி, கீழ்பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வேர்ப்புழு நோய் தாக்குதலால் சாம்பார் வெங்காயத்தின் மகசூல் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வெங்காயத்தை பாதுகாத்திட ஆலோசனை வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.