திட்டக்குடி, டிச. 13: திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்
புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான உமாராணி, நீதிமன்ற குற்றவியல் நடுவர் தாமரைஇளங்கோ ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.