3வது நாளில் 506 பேர் மனு தாக்கல்

நாமக்கல், டிச.12: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, 506 பேர் பல்வேறு பதவிகளுக்காக மனு தாக்கல் செய்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 138 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 358 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

Related Stories: