குமாரபாளையம், டிச.12: குமாரபாளையம் எக்ஸல் கல்வி குழுமத்தில், புதிதாக ஹோமியோபதி மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டுள்ளது என துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருந்தியல், சித்த மருத்துவம், பிஸியோதெரபி, யோகா, பாலிடெக்னிக், கல்வியியல் உள்ளிட்ட கல்லூரிகள், ஒரே வளாகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் மிகுந்த அனுபவமிக்க பேராசிரியர் நடேசன் தலைமையில் செயல்பட்டு வரும் எக்ஸல் குழுமங்களின் மாணவ, மாணவிகள், சிறப்பாக படித்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரவரிசைகளை பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர்.