கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டையில் அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் கால் விரல் நசுங்கியது. சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பள்ளி வரும் நேரத்திலும் மற்றும் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக முண்டியடித்து செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினத்திற்கு முன்பாக பள்ளி முடித்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவன் ஐயப்பன் (17) நெப்புகைக்கு கறம்பகுடி செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.