தக்கலை, டிச.11: வேளிமலை குமாரகோவிலுக்கு போலீஸ், பொதுப்பணி துறை மற்றும் பக்தர்களின் பல்வேறு காவடி பவனி 13ம் தேதி நடக்கிறது.
கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று தக்கலையை அடுத்த வேளிமலை குமாரசாமி கோயிலுக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. தக்கலை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்தும் மலர் காவடிகள் யானை ஊர்வலத்துடன் செல்வது வழக்கம். போலீஸ் காவடியின் போது விரதம் மேற்கொண்டுள்ள போலீசார் காவடி எடு்த்துச் செல்வர்.