முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத்தலம். இங்கு நடைபெறும் வருடாந்திர பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புனிதக் கொடி ஊர்வலத்துடன் 27.12.2019 அன்று கந்தூரி விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய நாளான சந்தன கூடு வைபவத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.