திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிரை காப்பற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல கிராமங்களில் பயிர் முழ்வதும் வடிவதுமாக உள்ளது. ஆனால் பல கிராமங்களில் பயிர் முழ்கி இருப்பது குறித்து விவசாயிகள் காலதாமதமாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் தூர்வாரததால் பல நூறு ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மற்றும் அதையொட்டியுள்ள கிராமங்களான ஐயன்கட்டி, பனிரெண்டாம் கண்ணி, காத்தான்கட்டளை, பொந்தைவெளி, வௌவெட்டு உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல நூறு ஏக்கர் சம்பா பயிர்கள் முழுவதும் நீர் முழ்கி உள்ளது.