விருதுநகர் மாவட்டத்தில் 4042 பதவிக்கு இரு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல்

விருதுநகர், டிச.10:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில், எஸ்பி., பெருமாள் முன்னிலையில்

நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டமாக நடத்தப்படும். மாவட்டத்தில் ஊராட்சிகளில் மொத்தம் 5,10,325 ஆண் வாக்காளர்கள், 5,33,163 பெண் வாக்காளர்கள், 94 திருநங்கைகள் என 10,43,582 வாக்காளர்கள் உள்ளனர். முதல்கட்டமாக டிச.27ல் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இவற்றில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகள், 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 194 ஊராட்சி தலைவர் பதவிகள், 1,554 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 1,028 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும். இதில் 2,71,035 ஆண் வாக்காளர்கள், 2,83,621 பெண் வாக்காளர்கள் 63 திருநங்கையர் என 5,54,719 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இரண்டாம் கட்டமாக டிச.30ல் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 97 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 256 ஊராட்சி தலைவர் பதவிகள், 1,818 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,114 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 2,39,290 ஆண் வாக்காளர்கள், 2,49,542 பெண் வாக்காளர்கள், 31 திருநங்கையர் என மொத்தம் 4,88,863 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 450ஊராட்சி தலைவர்கள், 3,372 கிராம வார்டு உறுப்பினர்கள் என 4,042 பதவிகளுக்கு இரு கட்டமாக நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த 25 தேர்தல் நடத்து அலுவலர்கள், 591 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 11 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள், 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 450 கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் என 474 பதவிகளுக்கு 11.1.2020 மறைமுக தேர்தல் நடைபெறும். மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில், போக்குவரத்திற்கு இடையூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது. காலை 6 மணிக்கு முன், இரவு 10 மணிக்கு பிறகு பிரச்சாரம் கூடாது. அரசு, பொது கட்டிடங்களில் விளம்பரம் கூடாது. கூட்டத்தில் டிஆர்ஓ உதயகுமார், நேர்முக உதவியாளர் தேர்தல் பழனி மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உரிமை... அதை பெறுவது நம் கடமை உரிமை... இந்த வார்த்தையே அதற்கான அர்த்தத்தை ஆணித்தரமாக கூறி விடும். ஒரு மனிதன் தான் பாதிக்கப்படும் எந்த ஒரு சூழலிலும், தனக்கான உரிமையை விட்டு தரக்கூடாது. கேட்டோ, போராடியோ பெற வேண்டும்.

அல்லது அவனுக்காக பிறர் போராடி பெற்றுத்தர வேண்டும். கருத்து, மொழி, ஜாதி, சமூக அடிப்படையில் யாரையும் துன்புறுத்தக்கூடாது. இதைத்தான் மனித உரிமை வலியுறுத்துகிறது. இரண்டாம் உலகப்போரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த அந்த சம்பவத்தால், உலகெங்கும் ஏராளமான அரசு மற்றும் தனிநபர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. நாடுகள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்தன. மிகப்பெரிய அந்த மனித பேரழிவுக்கு பின்னரே, மனித உரிமை குறித்து உலகளவில் விவாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டே (1946) ‘மனித உரிமை ஆணைக்குழு’ உருவாக்கப்பட்டது. 53 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு இக்குழுவானது, சர்வதேச அளவில் ஒரு குழுவை தோற்றுவித்தது. இக்குழு பரிந்துரையில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்’ ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரகடம் சமர்ப்பிக்கப்பட்ட டிசம்பர் 10ம் தேதியே, 1950ம் ஆண்டிலிருந்து ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது. அவற்றை பார்ப்போமா? அனைத்து மனிதர்களும் சமமானவர்கள். அவர்களுக்கு சமத்துவ உரிமை தரப்பட வேண்டும். அல்லது அவர்கள் பெறுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். ஒருவரை மொழியால், தொழிலால், சமூகத்தால் அவர்களை எக்காரணம் கொண்டும் வேற்றுமைப்படுத்த கூடாது. பாதுகாப்புடன் கூடிய சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒருவரின் சுதந்திரத்தை தடுக்கவோ, அதை கிடைக்காமல் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. உங்களுக்கு கீழ் ஒருவர் பணி புரிந்தாலும், அவரை அடிமையாக கருதக்கூடாது. அவருக்கான உரிமகளை கட்டாயம் கேட்க வேண்டும். குற்றம் செய்தவராக இருந்தாலும் அவரை கொடூரமான முறையில் தாக்கக்கூடாது. அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏழை, பணக்காரர் பேதம் காட்டக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே. ஒருவருக்கு உரிமை மறுக்கப்பட்டால் சட்டத்தை நாடி பெற வேண்டும்.

முதலில் காவல்துறையை அணுக வேண்டும். அங்கு நியாயம் கிடைக்காதபோது நீதிமன்றங்களை நாடலாம். சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவும், நாடு கடத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. ஒருவரது தனிப்பட்ட அல்லது அந்தரங்க பிரச்னையில் யாரும் தலையிடக்கூடாது. அவர்களை எக்காரணம் கொண்டும் எதிர்வினையாற்றும் சொல்லை பயன்படுத்தி, மனதளவில் காயப்படுத்தக்கூடாது. ஒரு நிகழ்வு தொடர்பாக தங்களது கருத்துக்களை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. அதை எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கற்க உரிமையுண்டு. ஆரம்பநிலை கல்வியாவது கற்றிருத்தல் அவசியம்.

இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தீவிர அக்கறை காட்ட வேண்டும். இடைநிற்றல் இருக்கவே கூடாது. பிறரது உரிமையை மதித்து போற்ற வேண்டும். அதை கண்டிப்பாக ஏளனம் செய்யக்கூடாது. முடிந்தவரை அதற்காக உதவலாமே தவிர, உதாசீனப்படுத்த யாருக்குமே உரிமை இல்லை. இதைத்தான் மனித உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது. ஆகையால் உங்களுக்கான உரிமையை கேட்டு பெறுங்கள்.

Related Stories: