தேவதானப்பட்டி, டிச. 10: தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மேல்மங்கலம் வராகநதி ஆற்றங்கரையில் உள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாரநந்தி, மாயாபாண்டீஸ்வரர் ஆகியோருக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், தேன், பழங்கள், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.