க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

வருசநாடு, மே 20: க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். க.மயிலாடும்பாறை ஒன்றயத்தில் எட்டப்பராஜபுரம், கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், பாலூத்து கடமலைக்குண்டு, மயிலாடும்பான்ற, குமணன்தொழு, பொன்னன்படுகை, மேகமலை, தங்கம்மாள்புரம், நரியூத்து, மூலக்கடை, மந்திச்சுனை, முத்தாலம்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், முருக்கோடை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

அனைத்து ஊராட்சிகளிலும் புதியதாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டிடத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இந்த கட்டிடங்கள் திறப்பு விழா காணாமல் உள்ளது. இந்த சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

The post க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: