பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 11,12வது மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனுக்கள் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முதல் வேட்பு மனு வாங்கும் பணி துவங்கியது. இதில் வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜீ மனைவி சுமதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமதி. இவர் ஏற்கனவே 1முறை ஒன்றியக் கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது கணவர் ராஜீ.ஒன்றிய சேர்மனாகவும், திமுக ஒன்றியச் செயலாளராகவும் இருந்துள்ளார். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜீ மனைவி சுமதியை தவிர நேற்று யாரும் வேட்பு மனு செய்யவில்லை.