உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு அளித்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல்

நாமக்கல், டிச.10:  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாமக்கல்லில் நேற்று  அமைச்சர் தங்கமணி நேர்காணல் நடத்தினார். நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த அதிமுகவினரிடம், நேற்று நேர்காணல் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட  அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை  அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி, விருப்ப மனு அளித்த அதிமுகவினரை அழைத்து நேர்காணல்  நடத்தினார். சுமார் 2 ஆயிரம் பேரிடம் நேர்காணல்  நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக கட்சியினர் அழைக்கப்பட்டு நேர்காணல் செய்யப்பட்டது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: