நாகர்கோவில், டிச. 10: அகில இந்திய தொழில்நுட்ப துறையின் உயரிய அமைப்பான புதுடெல்லியை சேர்ந்த ஐஎஸ்டிஇ அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து சிறந்த பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு மகளிர் பொறியியல் கல்லூரிக்கான பிரிவில். இந்தியாவிலேயே சிறந்த மகளிர் பொறியியல் கல்லூரியாக அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பெற்ற பரிசுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம், சமூகத்துக்கு பயனுள்ள புராஜெக்ட் மற்றும் பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கட்டுரைகள் வெளியிடுதல், பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களது பங்களிப்பு மற்றும் கட்டுரைகள் வெளியிடுதல், பல்வேறு அரசு அமைப்புகளிடம் இருந்து பெற்ற புராஜெக்ட் மற்றும் பேட்டண்ட், கல்லூரியின் கட்டுமான அமைப்பு மற்றும் கல்லூரியில் உள்ள பல்வேறு இதர வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அருணாச்சலா கல்லூரி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.