குளச்சல், டிச.10: குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை ரிக் இயந்திரம் இழுவை கப்பல் ஒன்று நின்றுகொண்டிருந்தது. நேற்று காலை அது குளச்சல் துறைமுக பாலம் அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் நின்றது. இதை பார்த்து மக்கள் பரபரப்படைந்தனர். குளச்சல் பகுதியில் ரிக் இயந்திரம் நிற்கும் தகவல் அந்த பகுதியில் பரவியது. ஏராளமான மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர்.