செங்கல்பட்டு, டிச.10: புதிதாக துவங்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். இதில், வருவாய் அலுவலர் பிரியா, ஆர்டிஓ செல்வம் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து 250 பேர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது, வண்டலூர் தாலுகா ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், கிளைச்செயலாளர் மெய்யழகன் உள்பட ஊரப்பாக்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தனர். அதில் 40 ஆண்டுகளாக 700 குடும்பங்கள் வசிக்கிறோம். வீட்டுவரி, தெருவிளக்கு, சாலை வசதி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை பெற்றுள்ளோம்.