மேலூர், டிச. 5: மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்காக கண் துடைப்பாக செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வட்டார ஊராட்சி அலுவலராக சாந்தி செயல்பட்டு வந்தார். அவர் அலங்காநல்லூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்த பழனிச்சாமி கொட்டாம்பட்டிக்கு மாற்றப்பட்டார். இதே போல் ஏற்கனவே கொட்டாம்பட்டியில் பணியாற்றி தற்போது மதுரை கிழக்கில் பணியாற்றும் பாலச்சந்தர் கொட்டாம்பட்டி கிராம ஊராட்சி வட்டார அலுவலரகாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதுவரை மாறுதல்கள் சரியாக நடந்து வந்தது போல் தெரிய, உடனடியாக மறுநாளே மீண்டும் இவர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். பழனிச்சாமியை மீண்டும் அதே அலங்காநல்லூருக்கு மாற்றி விட்டு, இங்கிருந்து வட்டார ஊராட்சி அலுவராக சென்ற சாந்தியை கொட்டாம்பட்டி கிராம ஊராட்சி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார்.