திருத்துறைப்பூண்டி, டிச.5:
இரும்பு சத்து மிகுந்த கீரைகள் பழங்கள் காய்கறிகளை கர்ப்பிணிகளை அதிகம் உண்ண வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுபாஷன் திவாஷ் விழிப்புணர்வு முகாம் பெரியநாயகிபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமில் மைய பணியாளர் மேனகா பேசும்போது: கற்ப்பினிதாய்மார்கள்பரிசோதனைநாள் முதல் குழந்தை பிறக்கும் நாள்வரை மூன்று முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை வளர்ச்சி, எடை, உடலில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை பெறுவது அவசியம். மேலும் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதாணியங்கள், இரும்பு சத்து மிகுந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள்இணை உணவுகள் அடிக்கடி உண்ண வேண்டும்.